தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ கைதுசெய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற செயற்பாடுகளை தவிர்த்து வந்த நிலையில், அவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அவரை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தார். நாரஹென்பிட்ட பகுதியில் துசித ஹல்லொலுவவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்









