கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்தும் நோக்கில் மூன்றாம் பாடசாலை தவணைக்காலம் நிறைவடைவதற்குள் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை நிறைவுசெய்ய கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய பயிற்சித்திட்டத்தை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக முதல்தர ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க உரிய தரப்பினருக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
அதன்பின்னர் மாகாண மட்டத்தில் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.









