2025 ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார்.
2025 ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2026 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை 2024ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
சித்தி பெற்ற மாணவர்களின் வீத அடிப்படையில்
1.தென் மாகாணம் 75.64 சதவீதம்.
2.மேல் மாகாணம் 74.47 சதவீதம்.
3.கிழக்கு மாகாணம் 74.26 சதவீதம்.
4.மத்திய மாகாணம் 73.91 சதவீதம்.
5.சப்ரகமுவ மாகாணம் 73.47 சதவீதம்.
6.ஊவா மாகாணம் 73.14 சதவீதம்.
7.வடமேல் மாகாணம் 71.47 சதவீதம்.
8.வடமத்திய மாகாணம் 70.24 சதவீதம்.
9.வட மாகாணம் 69.86 சதவீதம்
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









