பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகப்போவதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகவுள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தான் பதவியில் இருந்து விலகி பெண் பிரதிநிதி ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது பெண்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், நண்பல் 12 மணியளவிலும் கூட பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.









