2024ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று
நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிற|து. அதற்கமையஇ நாளை (23) முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கப்படும்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 2024.12.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்பதுடன்இ டிசம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் விடுமுறை காலம் ஆரம்பமாகும்.
அத்துடன்இ அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.01.02ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும். இதேவேளை பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை என்பதால்இ குழந்தைகள் மீது பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை நாட்களில் பல குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே இருந்து கையடக்க தொலைபேசி பாவனைக்கு அடிமையாகக்கூடும். இதனால் உளவியல் சமூக சூழலை’ இழந்து குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகஇ சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கவலைஇ மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெற மின்னணு திரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும்இ பல குழந்தைகள் தேவையற்ற இணையதளங்களை அணுகுவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவேஇ குழந்தைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது சுகாதாரதுறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் பார்வை குறைபாடுகள் அதிகரிப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.









