ரஷ்யாவின் தெற்கு தகெஸ்தான் மாகாணத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதிரியார் ஒருவரும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில் போராட்டக்காரர்கள் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக தகெஸ்தான் குடியரசின் தலைவர் செர்ஜி மெலிகோவ் தெரிவித்தார்.
டெர்பென்ட்டில் உள்ள தேவாலயத்தின் மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்ட பாதிரியார் தகெஸ்தான் பொது கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் ஷமில் காதுலேவ் அவரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். 66 வயதான அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவரென தெரியவந்துள்ளது.
மதவழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









