பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மேதின கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது மேதின வெற்றியாக பெருந்தோட்ட மக்களுக்கு அமைந்துள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.









