தெற்கு ஜப்பானின் குமமோட்டோ (Kumamoto) பகுதியில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கியூஷூ பிராந்தியத்தில் உள்ள குமமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் அதிகபட்சமான ஷிண்டோ 7 தீவிரத்தை பதிவு செய்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரியாகே மற்றும் யாட்சுஷிரோ கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
முதல் சுனாமி அலை அந்தக் கடலோரப் பகுதிகளை வந்தடைந்ததாக நம்பப்படுவதுடன், மேலும் அலைகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி குமமோட்டோ நகரின் தெற்கே உள்ள உகி நகரில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
மேலும், குமமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, புகோக்கா, சாகா மற்றும் மியாசாகி உள்ளிட்ட மாகாணங்களிலும் பலத்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது







