தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தொடர்ந்து கவனிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களை தமிழக வெற்றிக் கழகம் தொடர வேண்டும்.
மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம். எனினும் தி.மு.க அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000-வது வழங்க வேண்டுமென மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தருவதாக விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அது சந்தேகம்தான்.. ஆனால் அதைச் செய்தால் மகிழ்ச்சி.
உடனடியாக தேர்தல் வருவதை தி.மு.க விரும்பவில்லை. அரசமைப்பு குழப்பம் ஏற்படுவதையும் தி.மு.க விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆட்சியமைப்பதற்கென த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற் றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கியுள்ளது.
ஆனால் அதை பெற்றுக்கொண்ட ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பதில் இழுபறி நிலை நீடித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









