வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் பயிலுனர் ஆசிரியகள் சிலர் திடீர் சுகயீனம் காரணமாக கடந்த இரு தினங்களாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பலர் ஒரே வகையிலான நோய் நிலமைக்கு உட்பட்டுள்ளமையிலமையினால் வவுனியா தேசிய கல்வியற் கல்லுாரியில் திடீர் சோதனை நடத்தப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பயிலுனர் ஆசிரியர்ளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி குடிநீர் மாதிரி பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், உணவின் தரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் சுகாதார சீர்கேடாக காணப்படும் பகுதிகளை சீர் செய்வதற்கும் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியதோடு , பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளைஇ வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 40 பயிலுனர் ஆசிரியகள் திடீர் சுகயீனம் காரணமாக பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது









