சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளிலும் சமூக மட்டங்களிலும் கடந்த 19ம் மற்றும் 20ம் திகதிகளில்
விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், உரைகள், மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரின் பொறுப்பு மற்றும் கடமை என்ற உணர்வு வலியுறுத்தப்பட்டது.
திட்ட உரிமையாளர் வணக்கத்துக்குரிய ஏ.ஜி. ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை தடுக்கும் நோக்கத்துடன் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியக் குறிக்கோளாகும்.
மேலும் இன்றைய தினம் (23) சீயோன் சிறுவர் அபிவிருத்தி திட்டம் ஏற்பாட்டில், வட்டகொடையில் சிறுவர் பாதுகாப்பை வலியுறுத்தும் வீதி அமைதி பேரணி மற்றும் வீதி நாடகம் என்பன நடைபெற்றன.
குறித்த அமைதி பேரணியில், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற வீதி நாடகத்தில் சிறுவர்கள்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் வெளிப்படுத்தப்பட்டு அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது.









