வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உயிரிழந்த 32 வயதான எதிர்மனசிங்கம் கபில்ராஜின் மரணத்துக்கு நீதிகோரி இன்று இந்த ஹர்த்தால் நடத்தப்படுவதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழக்கம் போல இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.









