நாட்டில் தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு மாற்றீடாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து அமுல்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பத்துடன் நவீன உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.









