இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. கெபாவில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 109 ஒட்டங்களினால் தென்னாபிரிக்கா அணி வெற்றியீட்டியது.
2 ஆவது இனிங்சில் இலங்கை அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றியிலக்காக காணப்பட்ட நிலையில், இலங்கை அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டனர்.
அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 50 ஒட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தென்னாபிரிக்கா அணி தமது முதல் இனிங்சில் 358 ஒட்டங்களையும், 2 ஆவது இனிங்சில் 317 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியினர் முதல் இனிங்சில் 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்கா அணியின் பெட்டர்சன் தெரிவானதோடு, தொடர் நாயகனாக அணித்தலைவர் டெம்பா பவ்மா தெரிவுசெய்யப்பட்டார்.
தோல்வியுடன் தென்னாபிரிக்கா தொடரை நிறைவுசெய்து, இலங்கையணி நாடு திரும்பவுள்ளது.









