பெரு நாட்டில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
அந்நாட்டின்
தெற்கு பசிபிக் பகுதியில் கடுமையான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலஅதிர்வால் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.
பெரு நாட்டின் ஐகா பகுதிக்குட்பட்ட ‘பம்பா டி ததே’ என்ற நகரிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலஅதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது.









