ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலஅதிர்வையடுத்து சில வழித்தடங்களிலான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அனர்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
அண்மைக்காலமாக ஜப்பானில் அதிகளவான நிலஅதிர்வுகள் பதிவாகிவரும் நிலையில் மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் இருப்பதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.









