இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், யுத்ததிற்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை அளித்தல் ஆகிய நிபந்தனைகளை ஈரானிய ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .
குறித்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான யுத்த நிறுத்தம் சாத்தியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









