கம்புருபிட்டிய, மாபலான, ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுக்களிடையே நேற்று (20) பிற்பகல் மோதல் ஏற்பட்ட மோதல் தொடர்பில்
கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நேற்று முந்தினம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட பிரச்சினையில் மோதல் நிலையில் உருவாகியுள்ளது. மோதலில் காயமடைந்த ஆறு பல்கலைக்கழக மாணவர்கள் கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மோதல் தொடர்பாக பொலிஸாருக்கு முறையிட்டதையடுத்து 21 மாணவர்களை கம்புருபிட்டிய பொலிஸார் கைது செய்து இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அதன்போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.









