அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில் வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மாணவிகள் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.
இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் மாணவிகள் பல பிரிவுகளில் போட்டியிட்டு, முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளனர்.
அதற்கமைய தனி இசை , பிரிவு 5 ல் போட்டியிட்ட மாணவி வ. வர்ஷனா 3ம் இடத்தை பெற்றுள்ளார்.
குழு இசை முதலாம் பிரிவுக்கு 2ம் இடம் கிடைத்துள்ளது.
தனி நடனம் பிரிவு 4 ல் போட்டியிட்ட மாணவி கோ. அனன்யா அம்ருதா 2ம் இடத்தை தனதாக்கிக்கொண்;தர்.
குழு நடனத்திற்கு 3ம் இடமும், .இலக்கிய நாடகத்திற்கு 2ம் இடமும் கிடைத்துள்ளது.
வெற்றியீட்டிய மாணவிகளுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.









