முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
Zoom தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் வழக்கில் முன்னிலையானார்.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதப் பிரதிவாதங்களை கருத்திற்கொண்டு, கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் நிலுபுலி லங்காபுர ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியுள்ளார்.
மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29 ம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.









