மொனராகல- வெலியாய பகுதியில் இரு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ் வண்டியும் சுற்றுலா சென்ற தனியார் பஸ் வண்டியுமே விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரான இலங்கை போக்குவரத்து சபை பஸின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியும் , உள்ளுர் சுற்றுலா பயணிகளுடன் பயணித்த தனியார் பஸ் வண்டியும் மோதியுள்ளன.
காயமடைந்த 22 பேர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்









