அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கிறார்.
இந்நிலையில் தனது 2-வது முறை ஆட்சியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அரசியலமைப் பின் 14-வது திருத்தத்தின் படிஇ பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல்இ அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.
இந்நிலையில் 150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அதேவேளை அதை செயல்படுத்துவது என்பது ட்ரம்புக்கு கடினமாக இருக்குமெடன எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.









