கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வகை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதால் , இது தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அiமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைஇ பொருளாதார இலக்குகள் மற்றும் நாட்டின் தற்போதைய கையிருப்பு போன்றவற்றை நன்கு புரிந்து கொண்டுஇ நிதி அமைச்சின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இந்த வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.









