பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்களை இறக்குமதி செய்வதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த இறக்குமதி முன்பதிவுகளில் தாமதம் ஏற்பட்டாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டும் என்ற அச்சத்தில் சில்லரை வர்த்தகர்களும் மொத்த வியாபாரிகளும் தேவையற்ற வகையில் பொருட்களைச் களஞ்சியப்படுத்த வேண்டாமென அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.









