கெனடாவின் எயார் கெனடா விமான பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமறாறு அந்நாட்டின் அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
கெனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான எயார் கெனடா நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணிப்பெண்கள் தமது சம்பள அதிகரிப்பு, இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 500 விமானபயணங்கள் வரை தடைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில் கெனடாவின் தொழில்துறை அமைச்சர் பேட்டி ஹஜ்டுவுக்கும், விமான நிறுவனத்திற்கும் கெனடிய பொது ஊழியர் சங்கத்திற்குமpடையே பேச்சுவார்தை நடைபெற்றுள்ளது. பணிப்பெண்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது குறித்து அவதான செலுத்துமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக கெனாட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எயார் கெனடா நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பணிப்பெண்கள் பணிபுரிகின்றனர்.









