யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலொன்று வருகைதந்துள்ளது.
இந்தியாவிலிருந்து MV Express (Cordelia Cruises) அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலே வருகைதந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறைக்கு பயணித்துள்ளது.
10 தளங்களை கொண்ட மிக பிரமாண்டமான குறித்த கப்பல், இந்தியாவில் இருந்து சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகளுடனும் 584 கப்பல் ஊழியர்களுடனும் பயணிக்கிறது.
இன்றைய தினம் குறித்த கப்பல், காங்கேசன் துறையில் நங்கூரமிட்டிருக்குமென துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை சுட்டிக்காட்டதக்கது.









