அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன.
மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் நாளை 18 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
அத்துடன் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் , நவம்பர் 17 ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 19 ம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2025.08.19ம் திகதி செவ்வாய்க் கிழமை நிறைவடைவதுடன், மூன்றாம் தவணை 2025.08.25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.









