முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார் விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவர; சார்பான சட்டத்தரணி பிணை கோரிக்கையை மன்றில் முன்வைத்தார். அவரது கோரிக்கைக்கு அமைய பிணை வழங்கப்பட்டுள்ளது.









