இந்தியாவில் தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிக்போஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், சமூகவலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவிலும் பிக்போஸ் நிகழ்ச்சிக்காக தயார் செய்யப்பட்டிருந்த ஸ்டூடியோவை மூடுமாறு மாநில அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தண்ணீர், காற்று மாசு தொடர்பான உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதனையடுத்து ஸ்டூடியோவை உடனடியாக மூட மாநில அரசாங்கத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.









