இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றுமுதல் அமுலுக்கு வரும்வகையில் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45ஆவது பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட பணியை பொறுப்பேற்றுள்ளார். சீவலி அருக்கோட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









