பாகிஸ்தானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு பாகிஸ்தானில் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுச் சென்ற ஹெலிகொப்டரே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித் விபத்து நிகழ்ந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படடுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









