புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்றும் இன்றுமென இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது.அதன்பின்னர் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









